by Staff Writer 01-06-2022 | 2:16 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மத்திய நிலையமொன்றில் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர் ஒருவர் பணீ நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், ஹதோகம, களுவிலசேன பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கடமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன குறிப்பிட்டார்.