அரசாங்கத்தினால் வௌ்ள நிவாரணம்

அரசாங்கத்தினால் வௌ்ள நிவாரணம்

by Staff Writer 01-06-2022 | 1:57 PM
Colombo (News 1st) வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திரைசேரியின் நடவடிக்கை திணைக்களத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.