சிறுமி துஷ்பிரயோகம்; கைதான இருவருக்கு விளக்கமறியல்

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; கைதான இருவருக்கு 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 01-06-2022 | 3:30 PM
Colombo (News 1st) அட்டாளைச்சேனையை சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். அட்டாளைச்சேனையை சேர்ந்த 16 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயதான சிறுமி ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.