கொழும்பு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

கொழும்பு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

by Staff Writer 01-06-2022 | 3:22 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான வசந்தா ஹந்தபான்கொட உள்ளிட்ட 06 பேர் நேற்று (31) மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.