நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

by Bella Dalima 31-05-2022 | 3:55 PM
Colombo (News 1st) தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். பலத்த மழை காரணமாக நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை மீட்பதற்கு தாமதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சடலம் உருக்குலைந்துள்ளதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.