மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

by Staff Writer 31-05-2022 | 10:43 AM
Colombo (News 1st) வவுனியா - கணேசபுரம் 08ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் சடலம் அவரது வீட்டை அண்மித்து காணப்படும் கிணறொன்றிலிருந்து நேற்றிரவு(30) மீட்கப்பட்டுள்ளது. நேற்று(30) மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று(31) நடைபெறவுள்ளது. பரிசோதனைகளின் பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.