by Bella Dalima 31-05-2022 | 4:39 PM
Colombo (News 1st) நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் மின்வெட்டு நேரம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
ஜூன் 4 ஆம் திகதி மின்வெட்டு ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஜூன் 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது.