by Staff Writer 31-05-2022 | 12:06 PM
Colombo (News 1st) புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம்(CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூவரிடத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் நேற்று(30) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் அனுராதபுரம் - மகாஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்
காலி - நாகியாதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் வழக்கொன்றில் ஆஜராகிய நிலையில், வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.