அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல்

அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல்

அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2022 | 7:15 pm

Colombo (News 1st) பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அட்டுலுகமயை சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலில் வைப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் வாக்குமூலம் வழங்க சந்தேகநபரால் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், நாளைய தினம் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்