நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

நாளை(30) நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

by Staff Writer 29-05-2022 | 3:50 PM
Colombo (News 1st) 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று நாளை(30) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வானிலை சீராக காணப்படுமானால், எரிவாயுவை இறக்கும் பணிகளை நாளை(30) ஆரம்பிக்கலாமென அந் நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து, முன்னெடுக்கப்படும் தரப் பரிசோதனைக்காக 10 மணித்தியாலங்கள் செல்லுமெனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை அளவில் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க முடியுமென லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.