by Staff Writer 28-05-2022 | 4:38 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
76 மற்றும் 73 வயதான இரண்டு சகோதரிகளின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த வீட்டில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.