பண்டாரகமயில் 9 வயது சிறுமியை காணவில்லை

பண்டாரகமயில் 9 வயது சிறுமியை காணவில்லை; கடைக்குச் சென்று வீடு திரும்பவில்லை

by Staff Writer 28-05-2022 | 4:06 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் மாணவி ஒருவர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அட்டுலுகம - எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த 09 வயதான சிறுமி ஒருவரே காணாமற்போயுள்ளார். அட்டுலுகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 04-இல் கல்விகற்கும் மாணவி நேற்று காலை 10 மணியளவில் வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான CCTV காணொளிகள் தற்போது கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.