சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த மூவர் கைது

சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த மூவர் பசறையில் கைது

by Staff Writer 28-05-2022 | 6:10 PM
Colombo (News 1st) பசறை - லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடாவத்தை மற்றும் ஜனதாபுர ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சந்தேகநபர்களால் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடாவத்தை பகுதியில் 47 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 8.5 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மேலும், ஜனதாபுர பகுதியில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட 62 வயதான ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 6 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகவும் கூடிய விலைக்கும் பெட்ரோலை விற்ப​னை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.