கொள்ளுப்பிட்டியிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணி 

கோட்டாகோகம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள்; கொள்ளுப்பிட்டியிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணி 

by Staff Writer 28-05-2022 | 3:45 PM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி முதல் கோட்டாகோகம வரை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புகள், மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். கோட்டாகோகம போராட்டத்திற்கு 50 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி போராட்டக்களத்தை சென்றடைந்ததும், அங்கு பொதுமக்களை தெளிவுபடுத்தும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.