English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 May, 2022 | 6:10 pm
Colombo (News 1st) பசறை – லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடாவத்தை மற்றும் ஜனதாபுர ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் சந்தேகநபர்களால் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அடாவத்தை பகுதியில் 47 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 8.5 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், ஜனதாபுர பகுதியில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட 62 வயதான ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 6 லிட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகவும் கூடிய விலைக்கும் பெட்ரோலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
02 Jul, 2022 | 04:14 PM
28 Jun, 2022 | 06:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS