English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 May, 2022 | 8:15 am
Colombo (News 1st) இன்று(26) மற்றும் நாளைய(27) தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதில் ஒரு கப்பல் நாளை(27) நாட்டை வந்தடையவுள்ளதுடன், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(29) நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த இரு கப்பல்களிலும் 7,500 மெட்ரிக் தொன் எரிவாயு காணப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
முதலாவது கப்பல் நாளை(27) நாட்டை வந்தடைந்தவுடன், நாளை மறுதினம்(28) முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது கொள்வனவு செய்யவோ வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 Jul, 2022 | 08:34 AM
08 Jun, 2022 | 08:59 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS