தமிழக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் ஒரு தொகுதி மலையகத்திற்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 25-05-2022 | 8:12 PM
Colombo (News 1st) தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன. தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், மலையகத்தின் சில பகுதிகளில் விநியோகிப்பதற்கான நிவாரணப் பொருட்கள் ரயில் மார்க்கமாக இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இதனையடுத்து, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.