நாளையும் (25) எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ அறிவிப்பு

by Staff Writer 24-05-2022 | 7:50 PM
Colombo (News 1st) நாளையும் (25) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள மக்கள் இன்றும் வரிசைகளில் காத்திருந்தனர்.