English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 May, 2022 | 4:20 pm
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 4,696 நோயாளர்கள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் மொத்தமாக 24,942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் டெங்கு நிலவரம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் A.R.M. தௌபீக் இன்று தௌிவுபடுத்தினார்.
திருகோணமலை மாவட்டத்தில் 749 டெங்கு நோயாளர்களும் கல்முனையில் 500 பேரும் மட்டக்களப்பில் 587 பேரும் அம்பாறையில் 61 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
வட மாகாணத்தில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,785 நோயாளிகள் டெங்கு நோயுடன் இணங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 டெங்கு உயிரிழப்புகள் வடக்கில் பதிவாகியுள்ளதாக மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
21 Feb, 2022 | 04:12 PM
27 Jan, 2022 | 09:04 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS