21ஆவது திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

by Staff Writer 23-05-2022 | 5:42 PM
Colombo (News 1st) 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளான உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினையே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்