பொலிஸ்மா அதிபரிடம் CID வாக்குமூலம் பதிவு

பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 21-05-2022 | 7:45 PM
Colombo (News 1st) கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று பிற்பகல் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி மற்றும் விசேட பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.