அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

by Staff Writer 21-05-2022 | 10:19 AM
Colombo (News 1st) நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் 2022 மே மாதம் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நாட்டில் அன்றாட செயற்பாடுகளை பேணுவதற்கும் மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.