கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 21-05-2022 | 3:30 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றிரவு (21) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 08 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்