மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2022 | 5:24 pm

Colombo (News 1st) மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் (Azovstal) உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2,000 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 87 நாட்களாகின்றன.

மரியுபோல் நகரில் ரஷ்யா வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2,000 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு உக்ரைனின் Donbas பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்ய போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்