by Staff Writer 19-05-2022 | 8:21 PM
Colombo (News 1st) கோட்டாகோகம கிளையில் 41 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
இந்நிலையில், 'கோட்டாகோகம' என முகவரியிடப்பட்டு முதன்முறையாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
போராட்டக்களத்திலுள்ள ஏற்பாட்டாளர் குழுவின் நீதிப் பிரிவிற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதனிடையே, சிகையலங்கார நிலையமொன்றும் போராட்டக்களத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
போராட்டக்களத்திற்கு இன்றும் பெருந்திரளானோர் வருகை தந்திருந்தனர்.