கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய USD வரம்பு

கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வௌிநாட்டு நாணய வரம்பு  10,000 டொலர்களாக குறைப்பு 

by Bella Dalima 19-05-2022 | 4:38 PM
COLOMBO (News 1st) எவரேனும் கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வௌிநாட்டு நாணயங்களின் வரம்பு 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக குறைக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் எவரும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கக்கூடிய வரம்பு உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று குறிப்பிட்டார். அந்த வரம்பு 15,000 டொலர்களாக இருந்தது. தற்போது அதனை 10,000 டொலர்களாக குறைப்பது தொடர்பில் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. எனினும், குறித்த 10,000 டொலர்கள் நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார். இதன்படி, தற்போது வௌிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பீடு செய்ய அல்லது அதனை ஒப்படைத்து ரூபாவாக மாற்றிக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்