பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு 

பாண் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 3:20 pm

Colombo (News 1st) இன்று (19) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோரையும் பேக்கரி உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சிற்றுண்டிகளுக்கான விலைகளை நாளை காலை முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்