நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்

by Staff Writer 19-05-2022 | 7:44 AM
Colombo (News 1st) எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளிலும் அடுத்த சில நாட்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.