பேரறிவாளன் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை

by Staff Writer 18-05-2022 | 12:33 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம், தீர்ப்பிற்காக ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று(18) விசாரணை செய்த நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பினை வழங்கியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியமை தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம் எனவும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாகவும் நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.