போராட்டக்காரர்களை தாக்கிய மேலும் 6 பேர் கைது

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மேலும் 6 பேர் கைது 

by Staff Writer 18-05-2022 | 3:34 PM
Colombo (News 1st) கோட்டாகோகம மற்றும் மைனாகோகம மீது தாக்குதல் நடத்திய மேலும் 06 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர். கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சதுரங்க, சீதாவக்கை பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த ரோஹண, பந்துல ஜயமான்ன, தினெத் கீத்திக ஆகியோரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.