காலி முகத்திடல் போராட்டக்களத்தில் நினைவேந்தல் நிகழ்வு

by Staff Writer 18-05-2022 | 8:10 PM
Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் உயிர்நீத்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இன்று நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து இன மக்களும் பங்கேற்றிருந்தனர். இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனிடையே, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை கூறும் வகையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.