இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நாள்

by Staff Writer 18-05-2022 | 1:05 PM
Colombo (News 1st) இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும்(18). இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் இன்று(18) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி வவுனியா - குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்று நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் பஜார் பகுதியில் இன்று(18) நடைபெற்றது. இதனை தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.