நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; 3 இளைஞர்கள் உயிரிழப்பு

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; 3 இளைஞர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 May, 2022 | 7:08 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு(17) 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

2 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் மோட்டார் சைக்கிள்களின் பின்னால் அமர்ந்து சென்ற மூவரும் காயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுன்னாகம், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17, 23 மற்றும் 25 வயதான மூவரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் கவனயீனத்தினாலேயே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்