சொத்துக்கள் சேதமடைந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும்

வன்முறை சம்பவங்களால் சொத்துக்கள் சேதமடைந்தவர்களுக்கான நியாயத்தை பெற்றுத்தர நடவடிக்கை - பிரசன்ன ரணதுங்க

by Staff Writer 17-05-2022 | 7:14 AM
Colombo (News 1st) நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்த அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற, பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை இலக்கு வைத்து வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.