வன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

அண்மையில் இடம்பெற்ற  வன்முறைகள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது

by Staff Writer 17-05-2022 | 3:33 PM
Colombo (News 1st) அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 43 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் மேலும் பலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திலேயே 400-க்கும் மேற்பட்ட முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறினார்.