ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்:  SLPP பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்:  SLPP பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது

எழுத்தாளர் Staff Writer

17 May, 2022 | 7:08 pm

Colombo (News 1st) கடந்த 9 ஆம் திகதி மைனாகோகம , கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதனிடையே, மைனாகோகம ,கோட்டாகோகம மீதான தாக்குதல் தொடர்பில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நாளை (18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சொத்துகளை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்