நாட்டு மக்களை பாதுகாப்பதே நோக்கம் - பிரதமர்

by Staff Writer 16-05-2022 | 8:40 PM
⭕ ஒரு நாளுக்கான பெட்ரோலே கைவசமுள்ளது ⭕ அடுத்துவரும் சில மாதங்கள் மிகவும் கடினமானவை ⭕ புதிய வரவு செலவுத் திட்டத்தில் புதிய செயற்றிட்டம் ⭕ தனி நபரையோ, குடும்பம் ஒன்றையோ அல்லது ஒரு அணியை பாதுகாப்பது அல்ல, முழு நாட்டினதும் மக்களை பாதுகாப்பதே எனது நோக்கம் - பிரதமர் Colombo (News 1st) எதிர்வரும் சில மாதங்கள் கடினமானவையாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் இன்று(16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.