அரச செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க சுதந்திர கட்சி தீர்மானம் 

அரச செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க சுதந்திர கட்சி தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

16 May, 2022 | 6:23 pm

Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தயார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சுப் பதவியைப் பெறுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அதை பற்றி கலந்துரையாடப்படவில்லை எனவும் கட்சியின் தவிசாளருடன் கலந்துரையாடி அது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்