வவுனியா சிறையிலிருந்து 3 கைதிகள் விடுதலை

by Staff Writer 15-05-2022 | 3:46 PM
Colombo (News 1st) வவுனியா சிறையிலிருந்து 3 பேர் இன்று(15) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 35, 45 மற்றும் 63 ஆகிய வயதுகளையுடைய 3 கைதிகள் இன்று(15) காலை விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந. பிரபாகரன் தலைமையில் இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 244 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.