ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்

ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

by Staff Writer 13-05-2022 | 10:09 PM
Colombo (News 1st) தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பின்னர், மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச மற்றும் தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்