by Chandrasekaram Chandravadani 12-05-2022 | 6:46 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(12) காலை 07 மணியுடன் நீக்கப்பட்டு, மீண்டும் பிற்பகல் 02 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை(13) காலை 06 மணி வரை அமுலிலிருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முப்படைகளை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று(11) தெரிவித்திருந்தார்.