முதல் தடவையாக முடக்கப்பட்ட வட கொரியா

முதல் தடவையாக முடக்கப்பட்ட வட கொரியா

by Staff Writer 12-05-2022 | 10:37 AM
Colombo (News 1st) நாட்டை முழுமையாக முடக்குமாறு வட கொரியா உத்தரவிட்டுள்ளது. முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளதாக செய்தி வௌியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம், எத்தனை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பதை வௌியிடவில்லை. அணுவாயுத பலத்தை கொண்ட வட கொரியாவில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருக்கவில்லை.