ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்

ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 2 மணிக்கு அமுல் 

by Bella Dalima 12-05-2022 | 7:40 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை நண்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும். ஊரடங்கு சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.