English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
12 May, 2022 | 4:15 pm
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவான் இஸ்மத் ஜமீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிப்பத்திரமின்றி மீன் பிடித்தமை, இழுவைமடி தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இழுவைமடியை உடைமையில் வைத்திருந்தமை ஆகிய 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான், 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனையை விதித்து மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.
படகிற்கான உரிமை கோரல் விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் க.மோகனகுமார் தெரிவித்தார்.
அத்துடன் மீனவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
12 Jul, 2022 | 03:53 PM
05 Jul, 2022 | 07:31 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS