இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி 

நெருக்கடி நிலைக்கு தீர்வு காண இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி 

by Staff Writer 11-05-2022 | 12:29 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இனவாதம் மற்றும் மதவாதம் தூண்டப்படுவதை புறந்தள்ளிவிட்டு, சகவாழ்வு மற்றும் சமத்துவத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு ஜனாதிபதி தனது ட்விட்டரில் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளார்.