தேஷபந்து தாக்குதல்: கைதான இருவருக்கு விளக்கமறியல்

தேஷபந்து தென்னகோன் தாக்குதல்: கைதான இருவருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் 

by Staff Writer 11-05-2022 | 3:23 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பிற்காக நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபர்களை கொழும்பு மேலதிக நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதன் பிரகாரம், சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.