கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைப்பு

கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைப்பு

by Staff Writer 11-05-2022 | 6:57 AM
Colombo (News 1st) இன்றைய தினம்(11) நடைபெறவிருந்த பாராளுமன்ற கட்சிகளின் விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்துதவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அது நிச்சயமற்றது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.