மத்திய வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்கப் போவதில்லை

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

by Bella Dalima 11-05-2022 | 3:46 PM
Colombo (News 1st) நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிடின், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால், தாம் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும் நந்நலால் வீரசிங்க குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயங்களை கூறினார்.