மத்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

அகதிகளுடன் தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை

by Staff Writer 11-05-2022 | 6:19 PM
Colombo (News 1st) இலங்கையில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் வன்முறை போராட்டங்கள் காரணமாக அகதிகளுடன் சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக உள்துறை எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சு, தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சந்தேகப்படும்படியான படகு உள்ளே நுழைந்தால், தகவல் தெரிவிக்கும்படி  மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.