English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 May, 2022 | 7:36 pm
Colombo (News 1st) நேற்று (10) மாலை முல்லைத்தீவு – செம்மலை கடற்கரையில் காணாமற்போயிருந்த மூன்று சகோதரர்களில் இருவரின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கின.
நேற்று காலை 11 மணியளவில் கால்பந்து விளையாடுவதற்காக மூன்று சகோதரர்கள் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, கடலுக்குள் சென்ற பந்தை எடுப்பதற்காக ஒருவர் சென்றுள்ளார். அவர் நீரில் மூழ்குவதை அவதானித்த மற்றைய சகோதரர் கடலுக்குள் சென்று அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக மற்றைய சகோதரரும் கடலுக்குள் சென்ற நிலையில், மூவரும் காணாமற்போயுள்ளனர்.
அளம்பில் பகுதியை சேர்ந்த 27, 25 மற்றும் 22 வயதான சகோதரர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு சகோதரர்களின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கின.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, அம்பாறை பெரிய நீலாவணை கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் காணாமற்போன மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காணாமற்போயிருந்த மூன்று மாணவர்களில் ஒருவர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், காணாமற்போன மற்றுமொரு மாணவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.
01 Jul, 2022 | 04:10 PM
07 Jun, 2022 | 11:30 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS